Posts

Showing posts from February, 2021

வீரயுக நாயகன் வேள் பாரி -10

Image
  வீரயுக நாயகன் வேள் பாரி  அத்தியாயம்  10: யவனர்களின் `சொலாண்டியா' கப்பல், வழக்கம்போல் அரபுத் துறைமுகங்களில் தங்காமல், ஓசிலிஸ் வழியாக சிந்துநதியின் முகத்துவாரத்தில் இருக்கும் பாப்பரிக்கோன் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. கப்பலின் மாலுமி எபிரஸ், நீண்டகால கடல் அனுபவம் பெற்றவன். கடற்காற்றின் குறிப்பு அறிந்து கப்பலைச் செலுத்துவதில் கைதேர்ந்தவன். அதனால்தான் மிகப்பெரிய கப்பலான `சொலாண்டியா’வின் பயணம் இவன் வசமே பல ஆண்டுகளாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கப்பலின் பாதுகாப்புத் தளபதி திரேஷியன். தனி ஒருவனே கப்பலை நகர்த்திவிடுவது போன்ற உடல் அமைப்பு ​கொண்டவன். கடற்கொள்ளையர்களிடம் இருந்து தற்காத்து, `சொலாண்டியா’வின் பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமைய, இவனே முதற்காரணம். இவனது படைவீரர்களும் அபாரத் திறமைகொண்டவர்கள். பாப்பரிக்கோன் துறைமுகம், சரக்கு வர்த்தகத்தில் முக்கியமானது எனச் சொல்ல முடியாது. ஆனாலும் கப்பல்கள் பல நாட்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம். காரணம், இந்த நிலப்பரப்பின் தனித்த அடையாளமாக விளங்கும் யவன  இந்திய வம்சக் கலப்பால் உருவான அழகிகள். ஒரு சாயலில் யவனத் தேவதைகளாகவும் மறு சாயலில்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 9

Image
  வீரயுக நாயகன் வேள் பாரி  அத்தியாயம்  9: கபிலர் எவ்வியூர் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு இது...  சித்தாற்றின் வடபுலத்தைச் சேர்ந்த பாணர் கூட்டம் ஒன்று, எவ்வியூருக்கு வந்திருந்தது. அவர்கள், வேட்டைச் சமூகப் பின்புலத்தில் இருந்து பாணர்களாக மாறியவர்கள்; யாழ் தெய்வமான மதங்கனையும் மதங்கியையும் வணங்குபவர்கள். இந்தக் குழுத் தலைவன் `மதங்கன்' என்றும், தலைவி `மதங்கி' என்றும் அழைக்கப்படுவர். தாங்களே வேட்டையாடி, அந்த விலங்கில் இருந்து யாழுக்கு நரம்பு எடுத்துக் கட்டுவர்; அந்த விலங்கின் தோல்கொண்டு பறை செய்வர். இவர்களின் கூத்து, நள்ளிரவுக்குப் பிறகுதான் தொடங்கும். அரிசியின் அளவு பருமன்கொண்ட யாழ் நரம்புகள் மீட்டப்பட்டு பறை ஒலிக்கத் தொடங்கும்போது, வேட்டை விலங்கின் சீற்றம் ஆரம்பம் ஆ க ும். சிறுபறையின் ஒலியில் தொடங்கும் கூத்து, நேரம் ஆ க  ஆ க  உக்கிரம்கொண்டு காட்டை மிரட்டும். குகை விலங்கு வெளியில் வந்து எட்டிப்பார்க்கும். அதன் கண்களுக்குள் இருக்கும் நீல ஒளி, இருளுக்குள் ஊர்ந்து இறங்கும். இந்தக் குழுவினரின் அடையாளமே தோல் கருவியான தடாரிதான். தடாரிகளைத் துணிய...

வீரயுக நாயகன் வேள் பாரி - 8

Image
  வீரயுக நாயகன் வேள் பாரி   அத்தியாயம்  8: அடுத்து வந்த நாட்களில், எவ்வியூரில் நிகழ்ந்த கொண்டாட்டங்களை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. திரும்பும் திசைகள் எல்லாம் ஆட்டமும் பாட்டும் கூத்துமாக, காடே கலகலவென இருந்தது. கபிலரின் வரவு பெரும் விழாவானது. பாரியின் பீறிடும் அன்பை வெளிக்காட்ட வடிவங்கள் ஏது? கொண்டாட்டங்கள்... கொண்டாட்டங்கள்...கொண்டாட்டங்கள்! `கபிலரைத் தோளிலே சுமந்து வந்தான் பாரி' என்ற செய்தி, நாடு எங்கும் பரவியது. கபிலர் யார் என, பறம்பு மக்களுக்கு நேற்று வரை தெரியாது. ஆனால், தங்களின் தலைவன் தோளிலே சுமந்த ஒரு மாமனிதனைப் பற்றித்தான் இப்போது காடு எங்கும் பேச்சு. ஒரே நாளில் கபிலர், காட்டின் கதையாக மாறினார். அவரை அழைத்து வந்த நீலனும் வேட்டூர் பழையனும் இப்போது எல்லோராலும் தேடப்படும் மனிதராக இருக்கின்றனர். வேட்டுவன் குன்றில் கால் பதித்ததில் இருந்து, எவ்வியூருக்குள் நுழையும் வரையிலான கபிலரின் ஒவ்வோர் அடியும் இப்போது பழையனின் கதைக்குள் மிதந்துகொண்டிருக்கின்றன. தனது வீரத்தால் பேர் எடுத்த நீலனின் புகழ், கபிலரால் இன்னும் உச்சத்துக்குப்போனது. எந்நேரமும் இளம்பெண்கள் சூழ இருக்கும் நீலனை...

வீரயுக நாயகன் வேள் பாரி - 7

Image
  வீரயுக நாயகன் வேள் பாரி  அத்தியாயம்  7: இருட்டும்போது, நடுமலையின் மேற்குத் திசை அடிவாரத்தில் இருந்து புலிவால் குகைக்கு வந்து சேர்ந்தார்கள். இவர்கள் வரும் முன்னரே அந்தக் குகையில் பலர் இருந்தனர். எல்லோரும் கொற்றவைக் கூத்து பார்க்க, பறம்பு நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள். புலிவால் குகை, மிக நீளமானது. எத்தனை பேர் வேண்டுமானாலும் படுத்துறங்கிப் போகலாம். அதன் கீழ் மூலையில் கொடுங்கோடையிலும் வற்றாத நீரூற்று உண்டு. முன்னால் வந்தவர்கள், பந்தத்தைப் பொறுத்திவைத்திருந்தனர். ஏந்திவந்த ஆயுதங்கள் ஓர் ஓரத்தில் சாய்த்துவைக்கப்பட்டிருந்தன. வேட்டூர் பழையனைப் பார்த்ததும் எல்லோருக்கும் பெருமகிழ்ச்சி. ஆசையோடு வந்து பேசினர். வயோதிகத்திலும் தளர்ந்துவிடாத பழையனைப் பற்றி பேச எவ்வளவோ இருக்கின்றன! ஆணும் பெண்ணுமாக, பெருங்கூட்டம் கூடியிருந்தது. தாங்கள் கொண்டுவந்த உணவு​களைப் பறிமாறிக்கொண்டனர். அவித்த பன்றிக்கறியை உப்பு போட்டுப் பிசைந்து, பெருங்​கூடையில் தூக்கி வந்திருந்தது ஒரு கூட்டம். மூன்று மலைகளை ஏறி இறங்கியவர்களின் பசியை அதுதான் தாங்கும். விரல்களுக்கு இடையில் பன்றியின் ஊண் ஒழுகக் கடித...

வீரயுக நாயகன் வேள் பாரி - 6

Image
 வீரயுக நாயகன் வேள் பாரி  அத்தியாயம்  6: குடிலின் தாழ்வாரம் முழுக்க விளக்கின் வெளிச்சம் படர்ந்திருந்தது. பெருங்கலயத்தில் கஞ்சியும் இலையில் சுருட்டப்பட்ட துவையலும் கொண்டுவந்து கொடுத்தாள் அந்தப் பெண். துவையலைத் தொட்டு வழிப்பதற்கு ஏற்ப சுருட்டப்பட்ட இலையை விரித்துவைத்து, கலயத்தை வாங்கிக் குடிக்கத் தொடங்கினார் கபிலர். கஞ்சி தொண்டைக்குள் இறங்கும்போதே குளிர்ச்சி உடல் எங்கும் பரவியது. புளிப்பேறிய அருஞ்சுவையாக இருந்தது. ‘சுவைத்துச் சிறிது சிறிதாகக் குடிக்கவேண்டும்’ என்று எண்ணிய கபிலர், ஆட்காட்டி விரலால் துவையலை எடுத்து, நடுநாக்கில் வைத்து விரலை எடுப்பதற்குள், அதன் காரம் உச்சந்தலைக்குப் போய் முட்டியது. கண்கள் பிதுங்கின. விழுங்கிய துவையல் தொண்டையில் நின்றது. விழுங்குவதா... துப்புவதா என யோசிக்கும் முன்னர் காரம் சுழன்று பரவிக்கொண்டிருந்தது. கணநேரத்துக்குள் முழுக் கலயத்தையும் வாய்க்குள் கொட்டி முடித்தார். மூச்சு வாங்கியது. நாக்கு, காற்றைத் துழாவியது. சற்றே ஆசுவாசப்பட்டார். கண்கலங்கிய கபிலரைப் பார்த்து, வாய் பொத்திச் சிரித்தாள் அவள். தலையை உலுப்பி, காரத்தைக் கீழிறக்கினார் கபிலர். மறுகல...

வீரயுக நாயகன் வேள் பாரி - 5

Image
  வீரயுக நாயகன் வேள் பாரி   அத்தியாயம்  5: தனது நினைவில் இல்லாத ஒரு நாளைப் பற்றி கேள்விப்பட்ட கணத்தில் இருந்து, கபிலர் சற்றே அதிர்ந்துபோயிருந்தார். நீலன், அவர் அருகில்தான் உட்கார்ந்திருந்தான். அவனிடம் பேச கபிலரின் மனம் விரும்பினாலும், அவரது எண்ணங்கள் முழுவதும் கைதவறிப்போன நினைவுக்குள்தான் இருந்தன. நீலன் எழுந்தான். “ஊர்ப் பழையன் உங்களைப் பார்க்க வேண்டும் எனச் சொல்லியிருந்தார். அவரை அழைத்துவருகிறேன்” என்று சொல்லிச் சென்றான். ஊரின் மிக வயதான ஆணை `பழையன்' என்றும், பெண்ணை `பழைச்சி' என்றும் அழைப்பது வழக்கம். அதே யோசனையில் இருந்த கபிலர், தான் உட்கார்ந்திருக்கும் மரப்பலகையை விரலால் கீறிக்கொண்டிருந்தார். `எவ்வளவு அகலமான பலகையாக இருக்கிறது. இது என்ன மரம்?' என்று அதை உற்றுப்பார்த்தார். அவரால் கண்டறிய முடியவில்லை. அந்தப் பெண், சிறு மூங்கில் கூடையில் நாவற்பழங்களைக் கொண்டுவந்து கொடுத்தாள். அதை  வாங்கிக்கொண்ட கபிலர் “இது என்ன மரம்?” என்று கேட்டார். “திறளி மரம்” என்று சொன்னாள். “திறளி மரம் இவ்வளவு அகலமாக இருக்குமா!” “இது நடுப்பாகம்தான். அடிப்பாகம் இன்னும் அகலமானது. எங்களது குடிலில் ...